யாழ். பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவகக் கற்றுக்கொண்டிருந்த முள்ளியவளையைச் சேர்ந்த சி. பிரபாகரன் இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் நாளை ஆகும்.
கடந்த1989 ஆம் ஆண்டு ஏப்பில் 30 ஆம் திகதி நள்ளிரவு இந்திய இராணுவத்தால் கொக்குவில் ஆடியபாதம் வீதியில் வைத்து அவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
அப்போது திரு. சி. பிரபாகரனுடன் கூடவே சென்றுகொண்டிருந்த அவரின் நண்பனும் இன்று யாழ். பல்கலைக்கழக அரசறிவியற்துறைத் தலைவருமான பேரா. கே.ரீ. கணேசலிங்கன் இராணுவத்தினரால் அவ்விடத்தில் கைதுசெய்யப்பட்டு மறுநாள் காலை விடுதலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.