எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இரு வாரங்களுக்கு திருமணம் மற்றும் பொது வைபவங்களை இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் இன்று கூறினார்.