SHARE

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் அடையாள அட்டை பரிசோதனை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நாடளாவிய ரீதியில் 3 நாட்களாக அமுலில் இருந்த பயணத்தடை இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமையவே இன்று முதல் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் 1, 3, 5, 7, 9 என்ற ஒற்றை எண்ணாக இருக்குமானால், இன்று, நாளை மறுதினம் மற்றும் எதிர்வரும் 21, 23, 25, 27, 29, 31 ஆகிய திகதிகளில் வெளியில் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் 2, 4, 6, 8, பூச்சியம் என்ற இரட்டை எண்ணாக இருக்குமானால், நாளை மற்றும் 20, 22, 24, 26,28,30 ஆகிய இரட்டை இலக்க திகதிகளில் வெளியில் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email