SHARE

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 பேரை, 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நல்லூர்- அரசடி பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியினைச் சேர்ந்த இந்த 5 பேரும், யாழ்ப்பாணம் சிவன் கோயிலடிக்கு வருகை தந்திருந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 5 பேரும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, வெளியில் வந்து மது அருந்தியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை, யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதவான் நளினி சுதாகரன் முன்னிலையில் நேற்று பொலிஸார் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போது அவர்கள் தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட நீதவான் நளினி சுதாகரன், 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

Print Friendly, PDF & Email