SHARE

யாழ்ப்பாண ஆய்வுகூடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர். பரிசோதனைகளில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 105 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்திலமேற்கொள்ளப்பட்ட பி சி ஆ ர் பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டமை தொடர்பிலான தக வல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை பரிசோதனைக் கூட ஆய்வுகூட முடிவுகளின் அடிப்படையில் 48 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், சுகாதார வைத்திய அதி காரி பிரிவு ரீதியாக யாழ்ப்பாணத்தில் 28 பேர், பருத்தித்துறையில் 06 பேர்,பருத்தித் துறை ஆதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,உடுவிலில் 07 பேர், நல்லூரில் 09 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 02 பேர்,யாழ். சிறைச்சாலையில் இருவர்,கரவெட்டியில் ஒருவர்.) முல்லைத்தீவு மாவட்டத்தில் 07 பேர். (ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர், முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்) கிளிநொச்சி மாவட்டத்தில் 05 பேர் (பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர், கிளிநொச்சி மாவட்ட வைத்தி யசாலையில் ஒருவர்) வவுனியா மாவட்டத்தில் 05 பேர் (வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலை யில் ஒருவர்) மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாம் காணப்பட்டுள்ளனர்.

Print Friendly, PDF & Email