SHARE

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமாகிய இன்று திங்கட்கிழமை உலகமெங்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன

இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போரின் போதும் அதற்கு பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி தாயகத்தில் வீடுகளில் இருந்தவாறும் புலம்பெயர் தேசங்களில் அந்நாட்டு அரசாங்கங்கள் முன்னிலையிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில் இலங்கை இராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த பதிலை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் அதற்கான வலியுறுத்தலை பிரித்தானியா இலங்கைக்கு வழங்கவேண்டும் என்று கோரி இன்று பிரித்தானியாவில்; ஒன்றுதிரண்ட பெருமளவிலான தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Print Friendly, PDF & Email