SHARE

இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வலியுறுத்தக்கோரி அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரித்தானிய இளையோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் Bexleyheath and Crayford தொகுதியன் நாடாளுமன்ற உறுப்பினர் David Evennett உடனான சந்திப்பினை இன்று மேற்கொண்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் கௌசிகன் மற்றும் சசிகரன் செல்வசுந்தரம் குழுவினர் சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளிகள் மீது தடைவிதிக்க பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Print Friendly, PDF & Email