SHARE

பிரித்தானியாவின் கிளாஸ்கோவில் இன்று நடைபெறும் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய தங்கியிருந்த விடுதியை இன்று அதிகாலை சூழ்ந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புpரித்தானியாவின் பல பகுதிகளிலிருந்து இரவோடு இரவாக கிளாஸ்கோவிற்கு பயணமான புலம்பெயர் தமிழர்கள் அந்நகரின் Dunblane , Hydro Perth Rd இலுள்ள Hilton Hotel இல் முன் அதிகாலையிலே ஒன்றுகூடினர்.

மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள பல உலகத் தலைவர்கள் குறித்த விடுதியில் தங்கியிருக்கும் நிலையில் கோட்டாபயவும் அங்கே தங்கியிருக்கின்றார்.

இந்நிலையிலேயே அங்கு ஒன்று கூடிய தமிழர்கள் இனப்படுகொலையாளி கோட்டபாயவே தமிழர்களுக்கு நீதி வேண்டும் கோட்டாபய மனித உரிமைகளை மீறுபவர் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Print Friendly, PDF & Email