SHARE

சிறிலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவை உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) பிரித்தானியா தடைசெய்ய வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Hon. Bob Blackman கோரிக்கை விடுத்துள்ளார்.

இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கிலான பொதுமக்கள் கொல்லப்பட்ட போது 58 ஆவது இராணுவ படைப்பிரிவிற்கு சவேந்திர சில்வாவே இதலைமை தாங்கியிருந்தார். இவரது கட்டளையின் கீழே பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றதற்கான ஆதராங்களை ITJP யும் வெளியிட்டுள்ளது.

அதேவேளை இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டவர்கள் இன்னும் விடுதலைசெய்யப்படவில்லை. பெற்றோர் காணாமல் போன தமது பிள்ளைகளின் புகைப்படங்களுடன் இன்றும் வீதிகளில் இருந்து போராடிவருகின்றனர். அதற்கான தகுந்த பதில் இன்றுவரையில் வழங்கப்படவில்லை.

எனவே, சவேந்திர சில்வா மீது ஏற்கனவே பயணத்தடை விதித்துள்ள அமெரிக்காவின் வழியை பின்பற்றி பிரித்தானியாவும் தடை விதிக்கவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யுத்தக்குற்றவாளியான சவேந்திர சில்வாக்கு எதிரான தடை தொடர்பான இராஜதந்திர நகர்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் அவர்களின் தலைமையில் முன்னர் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான Rt.Hon.Sir Ed Davey MP ,Hon.stephen timms MP, Hon. Janet Daby, Gareth Thomas MP, Hon.Elliot Colburn MP, Hon.Theresa Villiers Virendra Sharma, Sarah Jones உள்ளிட்ட சுமார் 30 க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ள நிலையில் இன்று மேற்படி Hon. Bob Blackman எம்.பி.யும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email