SHARE

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலையின் 48 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது.

1974 ஆம் ஆண்டு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் பல தடைகளை ஏற்படுத்தியது.

குறிப்பாக அங்கு பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்திய நிலையில் இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று 48 ஆண்டுகள் கடந்துள்ள போதும், இதுவரை எவ்வித நியாயமும் கிடைக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email