SHARE

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 22ஆம் திகதி 2 ஆயிரத்து 943 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 3 இலட்சத்து 40 ஆயிரத்து 508 பரீட்சார்த்திகள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை 2 ஆயிரத்து 438 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2 இலட்சத்து 79 ஆயிரத்து 141 பாடசாலை பரீட்சார்த்திகளும் 66 ஆயிரத்து 101 தனியார் பரீட்சார்த்திகளும் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

Print Friendly, PDF & Email