SHARE

பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி  போட்டியில் முல்லைத்தீவு  வீராங்கனை கணேஸ் இந்துகாதேவி   தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தந்தையை இழந்த நிலையில்  தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து  குத்துச்சண்டையில் சாதித்து பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை  போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) பாகிஸ்தான் லாகூரில்  இடம்பெற்ற 25வயதுக்குட்ப்பட்ட 50_55கிலோகிராம் எடைப்பிரிவின் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.

Print Friendly, PDF & Email