SHARE

ரம்புக்கனை அமைதியின்மையை அரசியலாக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடு கலவரங்களை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக தற்போது இடம்பெறும் நாடாளுமன்ற அமரிவிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் ஆபத்தான சூழ்நிலை ஏனைய பகுதிகளுக்கும் பரவாமல் தடுப்பதற்கு கட்சித் தலைவர்கள் இணைந்து கலந்துரையாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Print Friendly, PDF & Email