SHARE

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கு பசில் ராஜபக்ஷ பரிசீலித்து வருகிறார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நாளை காலை 11 மணிக்கு ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த ஊடக சந்திப்பின்போது பதவி விலகல் குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு கடந்த 2021 ஜூலை 8ஆம் திகதி பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் நிதியமைச்சராகவும் பதவியேற்றிருந்தார்.

நாட்டில் ஏற்பட்ட பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக அவர் நிதியமைச்சர் பதவியிலிருந்து அண்மையில் விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email