SHARE

கிழக்கு மாகாண முதல்வராக நஜீப் ஏ மஜீத் சற்றுமுன்னர் பதவியேற்றுள்ளார்.

அலரி மாளிகையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்க முன்வந்ததை அடுத்தே, நஜீப் ஏ மஜீத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முதல்வராக நியமித்துள்ளது.

பங்காளிக் கட்சிகள் அனைத்தினதும் ஆதரவுடனேயே மஜீத் கிழக்கு முதல்வராக பொறுப்பேற்றுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள் கூறியுள்ளன.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சுப் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Print Friendly, PDF & Email