SHARE

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கடந்த சில தினங்களில் வடக்கில் பெருமளவும் போர் ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டிருப்பதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பொலிஸார் மேற்படி விடயத்தை தெரியப்படுத்தியிருக்கின்றனர்.

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் கிழக்கில் கடந்த 25ம் திகதி இடம்பெற்ற தேடுதலின்போது எம்.பி.எம்.ஜி துப்பாக்கிகள்-2 அதற்கான 200 ரவைகள், 100 வெற்றுக் கூடுகள், ரி-56 ரக துப்பாக்கிகள் 26 மற்றும் அவற்றுக்கான ரவைகள், ரவைக்கூடுகள், ஆர்.பி.ஜிகள், கைத்துப்பாக்கிகள் போன்றன நிலத்திற்கடியில் பாதுகாப்பாக புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றன.

இதேபோல் 26ம் திகதி பளை அம்மன் கோவிலுக்குப் பின்புறமாக சிறியரக செல் ஒன்றும் கைத்துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், வவுனியா காட்டுப் பகுதியிலிருந்து எம்.பி.எம்.ஜி துப்பாக்கி ரவைகள் 9, மற்றும் 7.62 மில் லி மீற்றல் ரவைகள் 25 மற்றும் 25 லீற்றர் ஓயில் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email