தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு சிறிலங்கா அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், போதிய பயணிகள் இல்லாமல் விமான சேவைகள் அடிக்கடி இடைநிறுத்தப்பட்டு வருகின்றன.
போதிய பயணிகள் இன்மையால், கொழும்பில் இருந்து, திருச்சிக்கு சேவையை நடத்தி வரும் மிகின் லங்கா நிறுவனம் கடந்த இரண்டு நாட்களாக சேவையை இடைநிறுத்தியுள்ளது.
நேற்று முன்தினமும், நேற்றும் திருச்சிக்கான விமான சேவைகளை மிகின் லங்கா நிறுவனம் நிறுத்திய போதிலும், முன்பதிவு செய்த பயணிகள் சிறிலங்கன் விமானசேவை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவில் இருந்து சுற்றுலா வந்த சிங்களவர்கள் திருச்சி அருகில் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து திருச்சிக்கு வரும் சிங்களப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
இதனால், சென்னை, திருச்சிக்கான விமானக் கட்டணங்களையும் சிறிலங்கா
விமான நிறுவனங்கள் குறைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.