SHARE

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில், இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமானச்சட்ட மீறல்கள் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை என்னவென்று, அமெரிக்கா மீண்டும் வினவியுள்ளது.

நியுயோர்க்கில் சிறிலங்காவின் நீதிஅமைச்சர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றோபேட் ஓ பிளேக் இதுபற்றி அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது, சிறிலங்கா அரசாங்கம் எதையும் மறைக்காது என்று தாம் உறுதியளித்ததாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

திருகோணமலையில் 5 மாணவர்கள் 2006ல் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்று உத்தரவாதம் அளித்ததாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email