SHARE

எதிர்காலத்தில் வறட்சியை சமாளிக்க, செயற்கை மழையைப் பெய்விப்பதற்கு சீனாவின் உதவியை நாட சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கொக்கலவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

“வறட்சி என்பது எமக்குப் புதியது அல்ல. முன்னைய சந்தர்ப்பங்களில் வறட்சியை சமாளிக்க நாம் தற்காலிக நடவடிக்கைகளை எடுத்திருந்தோம்.

ஆனால் இப்போது வறட்சியை எதிர்கொள்ள முன்கூட்டியே நாம் தயாராக வேண்டும்.

அதற்கு முன்னதாகவே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குளங்களை ஆழப்படுத்தல் அதில் ஒன்று.

அதைவிட எதிர்காலங்களில்,வறட்சி ஏற்படும் போது செயற்கை மழையை பெய்விக்க, சீனாவின் தொழில்நுட்ப உதவியைப் பெறவும் சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Print Friendly, PDF & Email