SHARE

தமிழீழ விடுதலைக்கான பாதையும் படிமுறையும்’ எனும் விடயப்பொருளை மையமாகக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் சிறப்புப் பொதுக்கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை (04ஃ11ஃ2012) Linderud பாடசாலை மண்டபத்தில் (Statsråd Mathisens Vei 27) மண்டபத்தில் பிற்பகல் 5 மணிக்கு நா.க.த. அரசாங்கத்தின் நோர்வேக்கான பிரதிநிதி திரு தோமஸ் அலோசியஸ் அவர்கள் தலைமையில் இடம் பெறும் இப் பொதுக்கூட்டத்தில், நா.க.த அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் காணொளி மூலம் கலந்து கொண்டு பிரதான சிறப்புரையினை ஆற்றுகிறார்.

தமிழீழ இலட்சியத்தை அடைந்து கொள்வதற்கான வாயப்புக்கள், சவால்;கள், இச் சவால்களை எதிர்கொள்ள நா.க..த அரசாங்கம் மேற் கொண்டு வரும் நடவடிக்ககைகள் குறித்து ஒரு விரிவான விளக்க உரையாக பிரதமர் ருத்ரகுமாரனின் உரை அமையவுள்ளது. இவ் உரையைத் தொடர்ந்து மக்களின் கேள்விகளுக்கும் ருத்ரகுமாரன் பதிலளிக்கவுள்ளார் என இக்கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இக்கூட்டத்தில் இடம்பெறும் சிறப்புரைகளைத் தொடர்ந்து ’நோர்வேயின் குழந்தைகள் நலக்காப்பகமும் புலம் பெயர் சமூகமும்’ எனும் கருப்பொருளில் ஒரு விவாத அரங்கமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வளப்படுத்தும்; வழிவகைகள் குறித்த கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

இக் கூட்டத்தில் சிறப்பரையாற்றும் பிரதமர் ருத்ரகுமாரனிடம் முன்கூட்டியே கேள்விகள் கேட்கவும் கருத்துக்கள் தெரிவிக்கவும் விரும்புவர்கள் tgte.norway@live.no எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்பி வைக்க முடியும்.

இப்பொதுக்கூட்டம் தொடர்பாக மேலதிக விபரங்களை அறிய விரும்புவோர் 40097631 எனும் தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது மேற்குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியுடனோ தொடர்புகளை மேற்கொள்ள முடியும்.

ஆர்வமுள்ள அனைவரையும் இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்த துணை நிற்குமாறும் ஏற்பாட்டாளர்கள் வேண்டிக்கொண்டுள்ளனர்.

Print Friendly, PDF & Email