SHARE

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விரைவில் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

கொழும்பில் இந்தப் பேச்சுக்கள் நடைபெறவுள்ளதாக சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

“புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் சாதகமான பதிலை அளித்ததை அடுத்து, இந்தப் பேச்சுக்களுக்கான ஆரம்பக் கட்டப்பணிகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால், நாட்டில் மோதல் நிலையும் பதற்றமும் தொடர்கிறது.

நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய- முப்பது ஆண்டுகால மோதலைப் போன்ற சூழல் மீண்டும் எழாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது முக்கியம்.

புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுக்கள் விடுதலைப் புலிகள் போன்ற குழுக்கள் மீண்டும் தலையெழுப்பதை தவிர்ப்பதை அடிப்படையாக கொண்டே நடத்தப்படவுள்ளன.

இல்லாவிட்டால், சிறிலங்கா இன்னொரு தீவிரவாதப் பிரச்சினையை பத்தாண்டு காலத்தில் எதிர்கொள்ள நேரிடும்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Print Friendly, PDF & Email