பிரித்தானியாவில் தமிழர்களுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ வுக்கு எதிராக இன்று லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது.
இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் அவரை பொலிஸார் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற ஒருமித்த கோரிக்கையுடன் சற்று முன்னர் பிரித்தானியாவிலுள்ள இலங்கைத்துதரகத்தின் முன் ஒன்று திரண்ட பல்வேறு தழிழர் அமைப்புக்கள் கெமன்வெல்த் அலுவலகம் வரையான மாபெரும் நடைபவணி பேரணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
உலகெங்கும் வாழும் தமிழர்தரப்பில் அவருக்கு எதிராக எழுந்த எதிரப்பலைகளின் ஒட்டுமொத்த வடிவாமாக இந்த எதிரப்பாட்டம் அமைந்திருக்கின்றதை அவதானிக்க முடிகின்றது.