–மஹிந்த ராஜபக்சவை நாடாளுமன்றில் எச்சரித்தார் இரா.சம்பந்தன்
ஒன்றிணைந்த இலங்கைக்குள் ஒன்றிணைந்த அதிகார அதிகாரப்பகிர்வையே நாம் கோருகின்றோம். தனி ஈழக்கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போது அரசியல் சூழல் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறும் விசேட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை அவர் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மகிந்தராஜபக்ஷவும் அவரது கட்சியினரும் மிகவும் கீழ்த்தரமான பிரசாரத்தை முன்வைத்தனர். நீங்கள் அரசாங்கத்திற்கும் ஐ.தே.க.வுக்கும் அளிக்கும் வாக்குகள் ஈழம் உருவாகவே வழிவகுக்கும் என அப்பாவி சிங்கள மக்களை வழிநடத்தியிருந்தார்கள்.
இவ்வாறு தொடர்ந்து சாதாரண மக்களை ஏமாற்றி தவறாக வழிநடத்தினால் தமிழீழம் மலர்வதை உங்களால் தடுக்க முடியாது என அவர் தெரிவித்தார்.