கண்டி திகன பகுதியில் நேற்று முழுவதும் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதலில் எரிக்கப்பட்ட வீடு ஒன்றினுள் சிக்குண்ட முஸ்லிம் இளைஞன் ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
நேற்றய கலவரத்தில் முஸ்லிம்களின் வீடுகள் பள்ளிகள் எரிக்கப்பட்டு தாக்கப்பட்ட நேரத்தில் தன் தாய், தந்தை மற்றும் சகோதரனை காப்பாற்றி விட்டு தன்னால் தப்பிக்க முடியாத நிலையில் வீட்டுக்குள் சிக்கிய நிலையினிலேயே அவ் இளைஞன் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.