SHARE

தமிழீழ தேசியத்தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பெயரின் குறியீட்டை தனது தேடு பொறியில் தீவிரவாதி என்பதிலிருந்து படைவீரர் (Soldier) என மாற்றியுள்ள கூகுள் நிறுவனம், உலகெங்கும் வாழும் தமிழகளுக்கு மகிழ்ச்சி செய்தியை அளித்துள்ளது.

கூகுள் தேடு பொறியில இவ்வளவு காலமும் தீவிரவாதி என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது தலைவரின் பெயரை படைவீரர் (Soldier) என்று மாற்றியுள்ளது.

இது விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு கிடைத்த மற்றுமொரு மிகப் பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.

பொதுவாக கூகுளில் தீவிரவாதிகள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் அழிக்கப்படும். தேடு பொறியில் அவ்வாறான தகவல்கள் தரப்படமாட்டாது. தகவல்களை அறியும் நோக்கில் தேடும் பட்சத்தில் தீவிரவாதி என்ற பதத்துடன் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்நிலையில் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பெயர் தற்போது ராணுவ வீரர் அல்லது படைத் தலைவர் என்ற தலைப்புடன் மாற்றப்படுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email