SHARE

கடல் சீற்றதால் முல்லைத்தீவு மீனவர்களுடன் காணாமல் போன படகு தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தின் கடலில் கரையொதுங்கியுள்ளதாக அறியமுடிகிறது.

கடந்த 12ந் தேதி காலை முல்லைத்தீவிலிருந்து மீன்பிடிக்க சென்று, கடல் சீற்றதால் காணமல் போன மில்ராஜ்,இமானுவேல், மிதுரதன் ஆகியோர் சென்ற மீன்பிடி பைபர் படகே இவ்வாறு கரை ஒதுக்கியுள்ளது.

ஆனால் படகில் மீனவர்களோ அல்லது மீன் பிடி சாதனங்கள் எதுவும் காணப்படவில்லை என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சிலாபத்தினை சேர்ந்த 51 அகவையுடைய மில்ராஜ் மிரண்டா, 48 அகவையுடைய இமானுவேல் மிரண்டா,24 அகவையுடைய மிதுறதன் மிரண்டா ஒரோ குடும்பத்தினை சேர்ந்த தந்தை மகன் மற்றும் தம்பி ஆகிய மூவரும் ஒரு படகில் தொழிலிற்காக சென்றுள்ளார்கள்.

இவர்கள் (12) நண்பகல் வேளை கரை திரும்புவதாக தெரிவித்துள்ளபோதும் கரை திரும்பாத நிலையில் விமானப்படையின் தேடுதல் கடற்ப்படையினர் தேடுதல் சுழியோடிகள் கடலில் தேடிதல் நடவடிக்கையில் ஈடுபட்டும் எந்த முடிவும் இல்லாத நிலையில் இன்று படகுமட்டும் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email