SHARE

காணாமல் போனோர் குறித்து நாடளாவரீதியில் 13 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

குறித்த விண்ணப்பங்களை காணமால் போனோர் பணியகத்திடம் கையளித்துள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காணமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்காக நாடெங்கிலும் பரவலாக அவர்களின் பெற்றோர் உறவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை அண்மையில் ஐ.நா.வின் 37 ஆவது கூட்டத்தேடரின் போது இலங்கையில் காணமல் போனோர் அலுவலகம் அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email