தந்தை செல்வாவின் 120 ஆவது பிறந்த தின நினைவுகூறல் நிகழ்வு இன்று யாழ் மற்றும் மன்னார் மாவட்டங்களில் நடைபெற்றது.
தனித்தமிழீழம் என்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தை கொண்டுவந்து தமிழருக்கான தனித்தேசம் வேண்டி அகிம்சை வழியில் சுய உறுதிப்பாட்டுக்கான போராட்டத்தை வழிநடத்திய தந்தை செல்வாவின் 120 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.
இந்நிலையில் யாழ்பாணத்தில் அமைந்துள்ள அவரது நினைவு உருவச்சிகை;கு தமிழரசு கட்சியின் சேனாதிராஜா மலர் மாலை அணிவித்ததுடன் அவரது நினைவுதூபிக்கும் அஞ்சலி செலுத்தினர்.
அதேவேளை மன்னாரிலும் தந்தை செல்வாவின் நினைவுருவச்சிலைக்கு மலர்மாலை அணியப்பட்டு அவரது பிறந்தநாள் நினைவுகூறப்பட்டது.