SHARE
ஊடகவியாளர்களின் படுகொலைக்கு நீதிகோரி வடக்கு-கிழக்கு ஊடகவியலாளர்கள்  இணைந்து மட்டக்களப்பில் இன்று (28) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாமனிதர் தர்மரத்தினம் சிவராம் (தராகி) படுகொலையின் 13ம் ஆண்டு நினைவு நாளான இன்று, அரசபடைகளாலும் அதனோடிணைந்து  செயற்பட்ட துணைப்படைகளாலும் அரங்கேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகநிறுவனங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு நீதி கேட்டு வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மட்டக்களப்பில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்டதொரு யுத்த சூழலிலும் அதன் பின்னரும்  வடகிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளினில் தமிழ் தேசியம் சார்ந்த ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் வன்முறைகள் பலவழிகளினிலும் கட்டவிழ்த்து விடப்பட்டே வருக்கிறது. அது கொலையாகவோ,காணாமல் போகச்செய்வதாகவோ அல்லது தாக்குதல், அச்சுறுத்தலாகவோ பல வழிகளினில் முன்னெடுக்கப்பட்டு வருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Print Friendly, PDF & Email