SHARE

அவுஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்றபட்ட 131 இலங்கையர்களை மலேசிய பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்த தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு மலேசிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக படகில் அவுஸதிரேலியாவுக்கு செல்ல முற்றப்ட் வேளையில் மலேசிய தெற்கு கடல் எல்லை பிரதேசத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 98 ஆண்கள் 24 பெண்கள் மற்றும் 7 சிறுவர்கள் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த இலங்கையர்களை சட்டவிரோதமாக அழைத்து சென்ற இந்தோனேஷிய நாட்டவர் மூவரும் மலேசிய நாட்டவர் 4 பெரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் யொகோ பாரு எனும் தடுப்பு முகாமில் ஆரம்பகட்ட விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.

Print Friendly, PDF & Email