SHARE
உக்ரைனில் கொல்லப்பட்டுவிட்டார் என நம்பப்பட்ட ரஷ்ய ஊடகவியலாளர் அர்கடி பாப்சென்கோ (Arkady Babchenko) இன்று ஊடகவியலாளர் மாநாட்டில் உயிருடன் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
குறித்த ஊடகவியலாளரை ரஸ்யா கொலை செய்த்துவிட்டது என்று குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையிலேயே இன்று அவர் உயிருடன் தோன்றியுள்ளார்.
எனினும் தன்னை கொல்லுவதற்கான உத்தரவை தனது ரஷ்ய நாட்டு பாதுகாப்பு தரப்பினரே பிறப்பித்திருந்ததாகவும் அத்தகவல் தனக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே கிடைத்ததாகவும் தெரிவித்தார்.
பலத்த காரகோச வரவேற்புக்கு மத்தியில் ஊடக மாநாட்டுக்குள் நுழைந்த அவர் தன் உயிரை காப்பாற்றியமைக்காக உக்ரைன் பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்தார்.
இதேவேளை இக் கொலை நாடகத்திற்கு தானே காரணம் எனவும் ஊடகவியலாளரை கொலைசெய்பவர்களை கைது செய்வே இவ்வாறு மறைந்து இருந்ததாகவும் தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகமாநாட்டில் இன்று அர்கடி பப்சென்கோ உயிருடன் தோன்றும் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த அவரது ரஷ்ய நாட்டு ஊடக நண்பர்கள் பெரும் அதிர்ச்சிககுள்ளானதுடன் மகிழ்ச்சியில் சிலர் கண்ணீர் விட்டு அழுதுகொண்டார்கள்.
Print Friendly, PDF & Email