SHARE

இலங்கையுடனான ஆயுதவிற்பனையை பிரித்தானியா நிறுத்தவெண்டுமென்ற கோரிக்கை வலுபெற்றுள்ள நிலையில், குறித்த விவகாரம் வெகுவிரைவில் பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

தமிழ் தகவல் நடுவத்தில் (TIC) நடைபெற்ற பிரித்தானிய கிங்ஸ்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எட் டேவி மற்று ஆயுத விற்பனைக்கெதிரான ஒருங்கிணைப்பாளர்களுடனான கலந்துரையாடலில் இதற்கான சமிக்ஞை பிறந்துள்ளது.

நவீனரக ஆயுதங்களைக்கொண்டு தமிழ்மக்களுக்கெதிராக சிங்களப்பேரினவாதத்தால் நடத்திமுடிக்கப்பட்ட கொடிய யுத்தத்தின் பின்னரான தற்போதைய நல்லாட்சி காலத்திலும், அரசின் இரும்புக்கரம் ஓங்கியே நிலையே காணப்படுகின்றது. தமிழர்வாழ் பிரதேசமான வடக்கு கிழக்குகளில் இராணுவமயமாக்கல் மற்றும் காணிகள் அபகரிப்பு தொடர்ந்தவண்ணமே உள்ளன. இதன் பின்னணியில் பிரதான காரணியாக ஆயுதக்கொள்வனவே காணப்படுகின்றது.

அந்தவகையில் இலங்கைக்கு ஆயுதம் விற்பனை செய்யும் பிரித்தானியா உடனடியாக அதனை நிறுத்த வேண்டுமென்றும். சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற நோக்கில் தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) ஏற்பாட்டில் அதன் உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் சுமார் 6 மாத காலத்திற்கு மேலாக பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தி வருகின்றனர்.

ஆளும் கட்சி எதிர்க்கட்சி என சுமார 30 ற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்ளை இதுவரையில் சந்தித்து குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தி ஆயுதவிற்பனையை நிறுத்த அழுத்தம் கொடுக்க்ககோரி வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நேற்றையதினம் கிங்ஸ்ட்ன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எட் டேவியுடனான சந்திப்பொன்று தமிழ்த் தகவல் நடுவத்தில் நடைபெற்றது. பணிப்பாளர் வி.வரதகுமார் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் இச்செயல்த்திட்டத்திற்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் அஷந்தன் மற்றும் சக ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டர்.

இதில் தலைமையுரையாற்றிய ரி.ஐ.சி.யின் பணிப்பாளர் வரதாகுமார் இருகர அரசியலைக்கையாளும் பிரித்தானியா ஒருகையால் மனித உரிமைகள் பற்றி பேசிக்கொண்டு  மறுகையால் மனித உரிமை மீறலுக்கு காரணியான ஆயுதவிற்பனையை செய்கிறது ஏன்? என்ற கேள்வியை நாடாளுமன்ற உறுப்பினர் எட் டேவி யிடம் முன்வைத்தார்.

அதனைத்தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர்களுடன் ஆயுதவிற்பனையால் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து கேட்டறிந்து கொண்ட எட் டேவி குறித்த விடயத்தை பாராளுமன்ற விவாதத்திற்கு உட்படுத்த தாம் முன்னின்று செயல்படுவதாக உறுதியளித்தார்.

பிரதான எதிர்க்கட்சியான தொழில்கட்சியுடனும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்தாலோசித்து அவர்களின் ஆதரவுடன் இதனை பாராளுமனற விவாதத்திற்கு உட்படுத்த செயலாற்றுவேன் என அவர் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email