SHARE

வடமராட்சி கிழக்கு உள்பட்ட வடக்கு மாகாணத்தில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறும் குற்றச்சாட்டுத் தொடர்பில் அனைத்து மீனவர் தரப்பையும் அழைத்து பேச்சு நடத்துமாறு மீன்பிடித் துறை அமைச்சருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை மாநாட்டில் வைத்தே இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“வடக்கின் கடல் வளத்தை, சட்ட விரோத மீன்பிடி உபகரணங்களை கொண்டு, பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்புடன், தென்னிலங்கை மீனவர் அபகரிப்பதாக கூறி, வடக்கில் மீனவர் நடத்தும் ஆர்ப்பாட்டங்களை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.

இந்த மீனவர் விவகாரம், வடக்கு-தெற்கு மோதலாக மாறக்கூடியதாக இருப்பதால் நான் இதில் தலையிடுகிறேன் என்று நான் கூறினேன்.

இதையடுத்து ஜனாதிபதி, இது தொடர்பில் மீன்பிடி அமைச்சர் விஜிதமுனி சொய்சாவை உடனடியாக, அனைத்து தரப்பையும் கூட்டி பேசுமாறு பணித்தார்” என்று அமைச்சர் மனோ கணேசன் தனது கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email