SHARE

வடக்கு மாகாண தனியார் போக்குவரத்துச் சேவைகளுக்கான நிரந்தர வழி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு யாழில் இன்று நடைபெற்றது.

யாழ் கிறீன் கிறாஸ் விடுதியில் இன்று காலை நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த வடமாகாண முதலமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் நிரந்தர வழி அனுமதிப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.
வடமாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவரும் முன்னாள் மன்னார் மாவட்ட அரச அதிபருமான நீக்கிளாஸ்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் போக்குவரத்து அதிகாரசபையின் உறுப்பினர்கள் போக்குவரத்துச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Print Friendly, PDF & Email